Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்

ஏப்ரல் 17, 2019 10:27

திண்டுக்கல்: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார் . இவரை ஆதரித்து நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது  பேசிய அவர், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். 

இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார் பின்பு சுதாரித்துக்கொண்டு  ஜோதிமுத்து என்றார் , தொடர்ந்து பேசிய சீனிவாசன் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார் இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது . சமீப காலமாக இந்த மாதிரி மாற்றி பேசி பெரும் சர்ச்சைக்குள்  அடிக்கடி சீனிவாசன் மாட்டிக்கொள்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது .

தலைப்புச்செய்திகள்